வறட்சியான காலநிலை : குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தமாறு வேண்டுகோள்!!

545

Water

நீரேந்தும் பகுதிகளில் வறட்சியுடனான காலநிலை நிலவுவதால் நீர் விநியோகம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நீர் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பௌசர் மூலம் எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சில நகர் புறங்களிலும் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நகர்புறங்களில் உள்ளவர்கள் கடைகளில் நீரை கொள்வனவு செய்து உபயோகப்படுத்துவதாகவும் அன்சார் மேலும் தெரிவித்துள்ளார்.