வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது!!

510

Pirajaikal

நேற்று இடம்பெறவிருந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக் கூட்டம் தலைவர் வரவின்மையால் இடை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான பிரஜைகள் குழுக் கூட்டம் உப தலைவர் தலைமையில் இடம்பெற்றது. ஒரு வாரத்திற்கு முன்னரே இன்று பிற்பகல் பிரஜைகள் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது

எனினும் காலை தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஸ்பிரேமச்சந்திரன், மற்றும் வவுனியா மாவட்ட பிரதி நிதிகளுடன் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கலந்து கொண்டார்.

பிற்பகல் இடம்பெற்ற வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் கூட்டத்திற்கு தலைவர் திரு. கி.தேவராஜன் கலந்து கொள்ளாததையிட்டு அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இடம்பெற்ற கூட்டம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்படவில்லை.

இக் கூட்டம் இடம்பெறுவது தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னரே எனக்கு தகவல் தரப்பட்டதாகவும் தனது ஆலோசனை பெறப்படாமல் இக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இக் கூட்டத்தை தனிநபர் ஒருவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவரிடம், இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டது தொடர்பாக கேட்டபோது அது சாதாரன கலந்துரையாடல் அத்துடன் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.