வவுனியா ரயிலின் முன் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

1099

images

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலின் முன்னாள் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது..

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் முன் நேற்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாய்ந்துள்ளார். பாய்ந்தவர் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த பெண்ணுக்கு இன்னும் சுயநினைவு திரும்பாத நிலையில் மேலதிக தகவல்கள் எதையும் பெற முடியாதுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.