
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
17 இலங்கையர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வௌியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





