மல்லாவியில் மல்லாவிக் கஜன் எழுதிய ‘ஒருபிடி மண்’ சிறுகதை வெளியீடு!!

537

1

மல்லாவியில் மல்லாவிக் கஜன் எழுதிய ‘ஒருபிடி மண்’ சிறுகதை நாளை (08.02.2016) மதியம் 1.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஈழத்து இலக்கிய தடத்தில் முல்லைத்தீவின் பங்களிப்பு குறைவாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது. அதிலும் துணுக்காய் பிரதேசத்திலிருந்து இலக்கியங்கள் படைக்கப்படுவது அரிதிலும் அரிதே.

அந்த வகையில் எதிர்வரும் 8ம் திகதி மகளிர் தினத்தன்று மல்லாவிக்கஜன் எழுதிய ‘ஒரு பிடி மண்’ சிறுகதைத் தொகுப்பு துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.

துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமையில் இந்நூல் வெளியிடப்படும். நூல் ஆராய்வுரையினை வைத்தியக் கலாநிதி செ.மதுரகன் (வவுனியா தமிழ் மாமன்ற மேல்சபை உறுப்பினர்) வழங்க.. வாழ்த்துக் கவியினை மல்லாவிக் கண்ணன் நிகழ்த்துவார்.

வாழ்த்துரைகளை துணுக்காய் பிரதேச செயலர் திரு குணபாலன், துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் மற்றும் எழுத்தாளரும் திறனாய்வாளருமாகிய கவிஞர் மேழிக்குமரன் ஆகியோர் நிகழ்த்துவார்.

சிறப்புரையினை முல்லைத்தீவு கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு ஞா ஆதவன் அவர்கள் வழங்குவார்

2 3