பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கு வகுப்புத்தடை!!

757

Pera

அனுமதியின்றி மேடை நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியமை தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் 12 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மேடை நாடகத்திற்கான பணம் வசூலிப்பு மற்றும் இந்த மேடை நாடகத்தை நடாத்துவதற்கான இடம் போன்றவை அனுமதியின்றி இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மேடை நாடகத்தில் பங்கு பற்றுவதற்காக வந்த நடிகர்,நடிகைகளின் வருகை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குறித்த 12 மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முகமாக இவர்களுக்கான வகுப்புத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-