தமிழ் ரசிகர்கள் வெள்ளித்திரையை ரசிப்பது போலவே சின்னத்திரையையும் ரசிக்கின்றனர்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பார்த்த சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி தான்.இதில் நடித்த செந்தில்-ஸ்ரீஜா இருவரின் பகுதி முடிந்த சில மாதங்களில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் அந்த சீரியல் இரண்டாம் பாகமாக சென்று கொண்டு தான் இருக்கிறது.ரேடியோ தொகுப்பாளரான செந்தில் சினிமாவில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனால் ஸ்ரீஜா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது இருவரும் இணைந்து விரைவில் சின்னத்திரைக்கு வரப்போகிறோம் என்று முகநூலில் பதிவிட்டுள்ளனர்.இந்த செய்தி இவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.