சிறுமி மீது பாலியல் வல்லுறவு- சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!!

456

1 (26)

ஐந்து வயதுச் சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டையவரென சந்­தே­கிக்­கப்­படும் 78 வய­து­டைய ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஹிதோ­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

ஹிதோ­கம பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஹல்­மில்­ல­குளம் கிரா­மத்­தி­லுள்ள பௌத்த விகா­ரையில் அண்­மையில் சிர­ம­தா­ன­மொன்று இடம்­பெற்­றது. இச் சிர­ம­தா­னத்தில் கலந்து கொள்ளச் சென்ற தாய் தன்­னுடன் 5 வயது மக­ளையும் கூட்டிச் சென்­றுள்ளார். சிறு­மியை விளை­யா­டு­மாறு கூறி­விட்டு விகாரை வள­வினுள் இடம்­பெற்ற சிர­ம­தானப் பணியில் குறித்த தாய் ஈடு­பட்­டுள்ளார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் சிறு­மியை ஏமாற்றி கூட்டிச் சென்ற சந்­தே­க­நபர் புத்தர் சிலை வைக்­கப்­பட்ட பகு­தியில் வைத்து சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார். சிர­ம­தானம் முடி­வுற்­றதும் இது பற்றி பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது தாயிடம் கூறி­யுள்­ள­துடன் குறித்த குற்­றத்தைச் செய்த நப­ரையும் இனங்­காட்­டி­யுள்ளார். உடன் ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் தாய் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.