மனித முகத்தோடு ஓர் அதிசய மீன் அகப்பட்டது!!

331

fish-like-man-face

கேரளாவில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கி இருக்கும் அதிசய மீன் ஒன்று மனித முகத்தோடு காணப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் வலையில் இம் மீன் அகப்பட்டிருக்கிறது.

மனிதர் உண்ணாத இம் மீனானது பேத்தை வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இதன் முகம் மனித வடிவில் இருப்பது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பிரதேசத்தின் மக்கள் ஆவலோடு இம்மீனை பார்க்க கூடி இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.