சூடுபிடிக்கும் தமிழ்நாடு தேர்தல் களம்: களமிறங்கும் நடிகர், நடிகைகள் யார்?

284

ELE

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகர், நடிகைகளை களமிறக்குவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி முடிவானதும் தொகுதி பங்கீடு, பிரசாரம் என தேர்தல் களமே படுபயங்கரமாக சூடுபிடிக்கும்.

இந்நிலையில் நடிகர், நடிகைகளும் பிரசாரத்திற்கு தயாராகும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதிமுக-வை பொறுத்த வரையில் நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, ஆனந்தராஜ், சிங்கமுத்து, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், தியாகு, குண்டு கல்யாணம், நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா, குயிலி, பாத்திமா பாபு உள்பட பலர் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராக இருக்கிறார்கள்.

திமுக-வில் வாகை சந்திரசேகர், வாசு விக்ரம், இமான் அண்ணாச்சி ஆகியோரும், காங்கிரஸ் கட்சியில் நக்மா, குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

இதுதவிர சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் பிரசாரம் செய்ய களத்தில் இறக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.