பேஸ்புக்கில் விரும்பிய கமெண்ட் வரலையே! விவாகரத்து கோரிய தம்பதி!!

294

couple_files_002

மும்பையில் தம்பதி ஒருவர் தமது புகைப்படத்திற்கு விரும்பிய கமெண்ட் வரவில்லை எனக் கூறி விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையின் தெற்கு பகுதியில் மனைவியுடன் குடியிருந்து வருபவர் குலாத்தி, இவருக்கும் மனைவிக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து பேஸ்புக்கில் தங்களது புகைப்படத்திற்கு Made for each other என்ற கமெண்ட் வந்தால் பிரிய வேண்டாம் எனவும் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் பதிவேற்றிய புகைப்படத்திற்கு நண்பர்கள் எவரும் குறிப்பிட்ட அந்த வாசகம் அடங்கிய கமெண்டை பதிவிடவில்லை என கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த அந்த தம்பதி தங்களை நட்பு வட்டமே நிராகரித்துள்ளது என முடிவுக்கு வந்ததுடன் விவாகரத்து கோரவும் முடிவெடுத்துள்ளனர்.இதுபோன்ற விவாகரத்து நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருவதாக கூறும் திருமண ஆலோசகர்கள், இது எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றனர்.