அதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்!!

305

smartphone_obsessed_002

சீனாவில் அதீத மொபைல் மோகம் காரணமாக சிறுவன் ஒருவன் தனது விரலை துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 வயதான பெங். இவருக்கு அவரது தந்தை புது மொடல் மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

அந்த மொபைலில் எந்த நேரமும் சிறுவன் பெங் விளையாடி பொழுதை கழித்து வருவது அவரது தந்தைக்கு கோபத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதத்தினிடையே சிறுவன் தனது சுண்டு விரலை துண்டித்துள்ளான்.

பதறிப்போன அவரது தந்தை உடனடியாக அந்த துண்டிக்கப்பட்ட விரலுடன் சிறுவன் பெங்கையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.3 மணி நேரம் நீண்ட அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை அந்த சிறுவனின் கையுடன் இணைத்துள்ளனர்.

வெற்றிகரமாக தற்போது இணைத்துள்ளதாக கூறிய மருத்துவர்கள், இனி மேல்தான் இணைக்கப்பட்ட அந்த விரலுடன் உடல் ஒத்துழைக்குமா என்பது தெரியவரும் என்றனர்.மேலும் இணைக்கப்பட்டுள்ள விரல் குணமடையும் வரை அழுத்தம் தராமல் இருந்தால் மட்டுமே விரைந்து குணமடையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தால் விரலை துண்டித்த சிறுவன் இனி மொபைல் விளையாட்டை நீண்ட நாளுக்கு ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.