சிறுவர்களுக்கான பலூன்களை பயன்படுத்தி தனது எதிரிகளை கண்காணிக்கும் ஐ. எஸ்!!

499

maxresdefault

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஆளற்ற விமா­னங்­க ளைப் பயன்­ப­டுத்­து­வ தற்கு தமக்கு வச­தி­யில்­லா­ததால் ஹீலியம் வாயு நிரப்­பப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­கான வாயு பலூன் ­களை தமது கண்­கா­ணி ப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்தி வரு­வது அறி­யப்­பட்­டுள்­ளது.

தமது பிராந்­தி­யத்தில் கண்ணைக் கவரும் வடி­வ­மைப்­பி­லான பலூன் கள் வானில் பறப்­பதைக் கண்டு சந்­தேகம் கொண்ட குர்திஷ் பெஷ்­மெர்கா படை­யினர், அந்த பலூன்­களில் ஒன்றை சுட்டு வீழ்த்­திய போது அத­னுடன் புகைப்­ப­டக்­க­ரு­வி­யொன்று பொருத்­தப்­பட்­டுள்­ளதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இத்­தனை மலி­ வான தொழில்­நுட்­ப­மு­றை­மை­யொன்றைப் பயன்­ப­டுத்தி தம்மை கண்­கா­ணிப்­பார்கள் என்பதை தாம் சிறிதும் எதிர்பார்த்திருக்கவி ல்லை என அந்தப் படையினர் கூறுகின்றனர்.