
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பிரதான நீர் தேக்கங்கள் மற்றும் நீர் மூலங்கள் வற்றிப் போயுள்ளதால் குடிநீரை சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டுமென்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நிலவுகின்ற குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பவுஸர்கள் மூலமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றன.
எனினும் அவ்வாறு விநியோகம் செய்கின்ற நீர் போதுமான அளவில் இல்லை என்று பிரதேநவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பிரதான நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





