
கிரிக்கெட் தெரிவுக் குழு தொடர்பில், தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்மறையான கருத்துக்கள் குறித்து ஆராய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் பிரதானி கபில விஜேகுணவர்த்தனவால், அரவிந்தடி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள புதிய தெரிவுக் குழு தொடர்பில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
எனினும், விஜேகுணவர்த்தனவின் இந்த கருத்து தவறான புரிதல் மற்றும் வழிநடத்தல்கள் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து, பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





