நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் : சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவித்தல்!!

773

Power cut

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதால் போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால கூறியுள்ளார்.

இந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.