நீதிமன்றில் வழக்கறிஞர் தூங்கியதால் 30 ஆண்டு சிறை தண்டனை ரத்து!!

538

Court

அமெரிக்காவில் உள்ள விர்ஜினீயா மாகாணத்தை சேர்ந்தவர் நிகோலஸ்வ ரஜின். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு இவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே தண்டனையை எதிர்த்து விர்ஜினீ யாவில் உள்ள ரிக்மாண்ட் மேல் நீதிமன்றில் நிகோலஸ் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ரோஜர் கிரகோரி முன்னிலையில் நடந்தது.

அப்போது ஏற்கனவே நீதிமன்றில் நடந்த விசாரணையின் போது நிகோலசின் வக்கீல் நிகிதா வி மாகி தினமும் சுமார் 30 நிமிட நேரம் தூங்கி வழிந்தார். அதனால் நீதிமன்றம் எதிர்தரப்பு நடத்திய வாதத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை என நிரூபிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நிகோலசுக்கு நீதிமன்றம் வழங்கிய 30 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. ஆனால் இவர் ஏற்கனவே 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.