வவுனியாவில் வைத்தியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

454

 
இலங்கையில் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை நிறுவுதல் மற்றும் எட்கா எனும் இலங்கை இந்திய பொருளாதார ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(16.03.2016) காலை வவுனியா வைத்தியர்கள் விடுதியிலிருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஹொறவப்பொத்தானை வீதியூடாக மணிக்கூட்டுக் கோபுரம் வீதிவழியாக கார்கில்ஸ் புட்சிட்டியை வந்தடைந்து அங்கு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, வைத்தியத்துறைக்கு ஆபத்து, நோயாளிகளை பலிக்கடா ஆக்காதீர், ஈ.ரி.சி.ஏ. ஜ இரத்துச் செய், நோயாளர்களின் உயிர் விற்பனைக்கில்லை, போன்ற பல்வேறு கோசங்களை முன்வைத்து வைத்தியர்கள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

DSC_0003 DSC_0007 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0017 DSC_0023 DSC_0025 DSC_0035 DSC_0037 DSC_0041 DSC_0049