கணவர் மீது சந்தேகம் : குழந்தைகள் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி!!

580

Murder

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் தனது குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்தராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொலிசார் இதுகுறித்து கூறுகையில், செகந்தராபாத் டீச்சர்ஸ் கொலனியில் வசித்து வரும் வினய் பரிசுப்பொருட்கள் விற்பனை அங்காடி வைத்துள்ளார். இவரது மனைவி சரோஜா என்ற ரஜினி. இவர்களுக்கு தன்ஷிகா (7), தன்வி (3) என இரண்டு பெண் குழந்தைகள்.

இந்நிலையில், ரஜினிக்கு தனது கணவர் வினய், மூத்த மகள் தன்ஷிகாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகித்ததால், அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ரஜினி நேற்றிரவு 8.30 மணியளவில் தனது மூத்த மகள் தன்ஷிகாவை குளியலறைக்கு அழைத்துச் சென்று உடைந்த கண்ணாடி போத்தலால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், இளைய மகளையும் அதே பாணியில் படுக்கையறையில் வைத்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது நெருங்கிய உறவினர் இருவருக்கு, வினயிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றிவிட்டேன் என்றும், குழந்தைகளை கொன்றுவிட்டதாகவும் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

இரவு வீடு திரும்பிய வினய் குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவரது மனைவியை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில் ரஜினி கூறுகையில், என் மூத்த மகள் என் கணவரை கண்டாலே பயப்படுகிறாள்.

வினய் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே என் குழந்தைகளைக் கொன்று வினயிடமிருந்து காப்பாற்றியுள்ளேன் என கூறியுள்ளார்.

Murder - Copy