
அஜினமோட்டோ சுவையூட்டியை சந்தையில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
மேலும் உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக பொதுவாக, சந்தையில் பயன்படுத்தப்படும் மொனோசோடியம் குளுடமைட் மற்றும் எம்.எஸ்.ஜீ இரசாயன சுவையூட்டிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமையவே குறித்த இரசாயன சுவையூட்டிகளை சந்தையில் இருந்து முற்றாக அகற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுவையூட்டிகள் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சுவையூட்டிகளை அளவுக்கு மீறி உணவுகளில் சேர்க்கப்படும் சந்தர்ப்பத்தில் தலைவலி, உடல்நடுக்கம், முதுகுவலி உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதோடு இதை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் போது நீரிழிவு நோய், உடற்பருமன் போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





