வவுனியா வடக்கு பெரியகுளம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.செ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இன்று (18.03.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு.V.ஸ்ரீஸ்காந்தராசா மற்றும் கெளரவ விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.சந்திரகுமார் மற்றும் பகுதி கிராம சேவையாளர் S.பிரமிளா மற்றும் மன்னகுளம் பகுதி கிராம சேவையாளர் உ.பிரதீபா, கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொஸிஸ் உத்தியோகத்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இம் மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை கனடாவில் வசிக்கும் குகேந்திரன்(குகன்) அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.






