
வவுனியா உக்கிளாங்குளத்தில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்பு பட்டவர் என்ற சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது பொலிசாரின் விசாரணைக்கு மேலும் 14நாள் விளக்க மறியல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 01.04.2016 வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.





