வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்ணிடம் பட்டப்பகலில் தங்கச் சங்கிலி அறுப்பு!!

769

Chain

வவுனியாவில் இன்று(19.03.2016) காலை கர்ப்பிணிப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலி ஒன்றை அறுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து திருடன் தப்பி ஓடியுள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பறநாட்டாங்கல் பகுதியில் வசித்து வந்த 5 மாதமான குறித்த கர்ப்பிணிப் பெண் சாந்தசோலையிலிருக்கும் குடும்பநல சுகாதார நிலையத்திற்கு இன்று காலை10 மணியளவில் சென்றுவிட்டு திரும்ப வீடு செல்வதற்கு வந்து கொண்டிருக்கையில் சாந்தசோலையிலிருக்கும் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் சென்று கொண்டிருக்கையில் பிரதான வீதியிலிருந்து வேகமாக பல்சர் மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர் ஒருவர் வயல் பகுதியை அண்டிய பகுதியில் திடீரென குறித்த பெண்ணின் கழுத்திலிருந்த ஒன்றரைப்பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளார்.

கர்ப்பிணிப்பெண் கூச்சலிட்டு அலறிய சத்தத்திற்கு அருகிலிருந்த கடை உரிமையாளரின் உதவியுடன் அவசர பொலிஸ் தொலைபேசிக்கு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வவுனியா பொலிசார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணையினை மேற்கொண்டனர்/

கழுத்தில் கைவைத்து தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து முறைப்பாட்டினை மேற்கொண்ட பொலிசார் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு தெரிவித்ததுடன் மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.