சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் தினம் வவுனியா கருப்பனிசங்குளம் பாடசாலையில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா கோட்டக்கல்விப் பணிமனையின் உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.வரதகுமார் கலந்து சிறப்பித்தார்.
அன்றை தினம் சிரமதானப் பணிகளும் சிறப்பான உணவு வழங்கலும் இடம்பெற்றது. இதன்போது பாடசாலைக்கு சிறந்த கிணறு ஒன்றை கட்டுவதற்கு நலன் .விரும்பிகளின் உதவியை நாடுவதாக அதிபர் தெரிவித்தார்.






