4 நாய்களை அடித்து கொன்ற இளைஞர்!!(காணொளி)

621

Dog

டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே நாய்கள் இறந்து கிடப்பதாக டெல்லி பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனே பொலிசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு குட்டையில் 3 தெரு நாய்களும், ஒரு நாய்க்குட்டியும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தன.

இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கமராவை பொலிசார் ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத ஒருவர் 3 நாய்களை சரமாரியாக அடித்து கத்தியால் குத்தி கொன்றதும், பின்னர் ஒரு நாய்க்குட்டியையும் அடித்து கொன்றதும் பதிவாகி இருந்தது.

அந்த நபர் குறித்து அடையாளம் தெரியாததால் கண்காணிப்பு கமராவில் பதிவான வீடியோ காட்சியை ‘யூ டியூபில்’ பொலிசார் பதிவேற்றி உள்ளனர். மேலும் இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தங்கள் பகுதியில் சில நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால் 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று ஒரு தொண்டு நிறுவனம் அறிவித்து உள்ளது.