கடந்த 18.03.2016 வெள்ளிக்கிழமை பாக்கியம் அறக்கட்டளை நிறுவனத்தின் பராமரிப்பு மற்றும் நிதி அனுசரணையில் கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினர்களாக பாக்கியம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த திரு.ப.வினாசிதம்பி, திரு.ப.விஜயலக்சுமி, திரு.சு.ஐயாத்துரை, திரு.த.தங்கமுத்து, திருமதி.தி.கமலா, திருமதி.ப.அன்னலட்சுமி, திருமதி.யு.யுவலட்சுமி, திருமதி.பொ.இந்திராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் The Compassion அமைப்பைச் சேர்ந்த செல்வி. கிரிஜா பாலசிங்கம், திரு.P.நவனீதன், திரு.மகேஜ்வரன் ஐயா ஆகியோரும் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத் தலைவர் S.P.சுதர்சன்,
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.S.ஸ்ரீநிவாசன், மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர் திரு. J.கென்னடி, ஆகியோரும் விசேட விருந்தினர்களாக பன்டாரிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.S.N.குனரத்ன,
கூமாங்குளம் கிராம வாழ்வின் எழுர்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.S.கபிலன், கூமாங்குளம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.M.கமலாம்பிகை, கட்டமைப்பு மாவட்ட முன்பள்ளி தலைவரும் பாரதிபுரம் வித்தியாலய அதிபருமான திரு.அ.முரளிதரன்,மற்றும் மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. S.அருள்வேல் நாயகி ஆகியோரும்
கௌரவ விருந்தினர்களாக கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.மா.புஸ்பராஜா, கூமாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தலைவர் திரு.ந.ஆறுமுகம், கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் திரு.P.சத்தியசீலன், ஆகியோரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்ககள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகள் மற்றும் முன்பள்ளி புனர்நிர்மாண வேலைகளை
லண்டன் The Compassion, அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அம்மன் ஆலயத்தில் பூஜையுடன் ஆரம்பமாகிய நிகழ்வு விருத்தினர்களை மாலையிட்டு வரவேற்கபட்டனர் பின்னர் பாக்கியம் அறக்கட்டளை பெயர்பலைகை திறந்துவைக்கப்பட்டது அதன்பின் இறைவணக்கத்துடன் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் கலைநிகழ்ச்சியும் விருந்தினர்கள் உரையும் இடம்பெற்றது மதியபோசன விருந்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.






