வவுனியா ஒமந்தை மருதங்குளம் தந்தை செல்வா முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியானது பாடசாலையின் ஆசிரியரின் தலைமையில் 19.03.2016 அன்று நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, G.T.லிங்கநாதன் மற்றும் கெளரவ விருந்தினராக ஒமந்தைப் பகுதி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பகுதிக் கிராம சேவையாளர் ஒமந்தைப் பகுதி கிராம சேவையாளர் மற்றும் விருந்தினராகக் கலந்து கொண்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், அங்கத்தவர் கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






