முகம் அழகு பெற பாம்பு மசாஜ்!(படங்கள்)

592

பெண்களின் முகம் அழகாக மிளிர வேண்டும் என்பதற்காக ஒருசில பெண்கள் என்னென்னவோ செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை..அது எல்லோருக்குமே தெரிந்த கதை.

ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த மானமி டாக்கமுறா என்ற பெண் நத்தை பேஷியலை வருகின்றார். இந்த நத்தை பேஷியல் சிகிச்சையின் மூலம் முகத்தில் ஏற்கனவே காணப்படும் பருக்கள், முகச் சுருக்கம், கரும்புள்ளிகள் என்பவை நீங்கி முகம் புதுபொழிவுடன் பிரகாசிக்கின்றதாம்.தற்போது ஜப்பானில் இந்த சிகிச்சை முறை பெண்களிடம் வேகமாக பரவி வருகின்றது என்ற விடயமும் நீங்கள் அறிந்ததே.

நத்தை மசாஜை விடவும் ஒருபடி மேல் என்று கூட இதனைக் குறிப்பிடலாம்.அதாவது பாம்பு மசாஜ் தான் அது. என்ன பாம்பு மசாஜ் என்றதும் முகத்தைச்சுழிக்கிறீர்கள். முகச்சுறுக்கத்துக்கு நிவாரணம் பெறுவதற்காகவே தான் இந்த மசாஜாம்.

சிறு எறும்பு முகத்தில் ஓடினால் கூட அந்த எறும்பை பிடித்து நசுக்கி எறிந்து விடுவதே ஒவ்வொருவரினதும் வழமையான செயற்பாடு. ஆனால் இந்தப் பெண்கள் தமது முகத்தில் நத்தைகளை மட்டுமல்ல பாம்புகளையும் ஊர்ந்து செல்ல விடுகிறார்கள் என்றால் என்ன வேடிக்கையான உலகம் இது.

பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் கொள்வதற்காக இதைவிடவும் மிகவும் பயங்கரமான மசாஜ்களை கையாண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இத்தகைய மயிர்கூச்செறியும் மசாஜ் முறைகள் கண்டிப்பாக எமக்குத் தேவை தானா?

s7

s1 s2 s3 s4 s5 s6