
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை 8.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இன்று காலை டிப்பர் உடன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கில் மோதியதில் மோட்டார் சைக்கிலில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் உடனடியாக புளியங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
படுகாயமடைந்தவர் சுகுணன் 38 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





