
வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் பாடசாலையில் எட்டு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ திறமைச்சித்தி பெற்றுள்ளனர். குறித்த மாணவர்களில் மூவர் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்கள்.
அஜந்தி யோகராஜா, மோஜிதா முத்துராசா, தட்சாயினி கணேசன், ஜதிநிலா பாஸ்கரன், பாத்திமா பைசா தௌபிக் ஆகிய மாணவர்கள் தமிழ் மொழிமூலம் 9 ஏ சித்திகளை பெற்றவர்கள்.
தர்சா சிவபாலராஜா, பூஜிதா ஜெயக்குமார், அபிரா ஸ்ரீஸ்கந்தராஜா ஆகிய மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, திவ்யா வேதநாதன், நிலக்சிகா ரஞ்சன், கஜலக்சி ராமச்சந்திரன், ஜதுர்சிகா யோகரட்ணம்,தனுசியா தவராஜா, பூஜா சபேசன், கம்சாயினி கண்ணன், மதுசா ஸ்ரீசேன, கேசாம்பவி கோடீஸ்வரன், டிலக்சனா சதீஸ்குமார், டிலக்சனா தயாபரன் ஆகிய மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்றுள்ளனர்.
தவதன்ஜா ரவிச்சந்திரன், ரஞ்சினி கமலதாசன், விதுட்சா வேலும்மயில் ஆகிய மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் சி சித்தியும் பெற்றுள்ளனர்.





