வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!

263

 
வவுனியா வடக்கு பிரதேச சபையினால் உலக வங்கியின் நிதி அனுசரனையில் DFAT வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கென கலாசார மண்டபம் அமைப்பதற்கான வேலையின் அடிக்கல் நாட்டும் விழா நேற்று (21.03.2016) பிரதேச சபையின் செயலாளர் திரு.க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான M.தியாகராஜா, G.T.லிங்கநாதன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன், நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள், பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

942883_767263823418457_4826298895957969084_n 1929761_767265616751611_7707295896171426609_n DSC_0409 DSC_0417 DSC_0421 DSC_0423 DSC_0426 DSC_0428 DSC_0430 DSC_0436