வவுனியாவில் நடைபெற்ற யுத்த காலத்தில் மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

597

 
வவுனியா மாவட்ட பொலிஸ் பொதுமக்கள் நட்புறவு பிரிவினரின் ஏற்பாட்டில் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று(21.03.2016) வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யுத்த காலத்தில் மரணித்த பொலிஸ் வீரர்களின் நினைவாக, பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிகளுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது சேவைகள் நினைவுகூறப்பட்டன.

குறித்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஈ.எம்.மஹிந்த ஏக்கநாயக்க, வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகள், இறந்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு மடுக்கந்தையில் பொலிஸாரால் இரத்ததானம் முகாம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

news (1) news (3) news (4) news (5)