வவுனியா சிதம்பரபுரம் முகாமில் வசிக்கும் ஆண்டு 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்க்கும் 46 மாணவர்களுக்கு நகரசபை ஊழியரும், சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளருமான கே.ரவிசந்திரன் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரான்சில் வசிக்கும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்களால் கற்றல் உபகரணங்கள் கடந்த 19.03.2016 அன்று சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவிலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எ.ரெக்ஸ்சன், செயலாளர் அ.கிரிசாந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளர் ரவிசந்திரன், பழனி முருகன் ஆலயத் தலைவர் அ.மாதவன் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.