வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தன!!

476

Mahela

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன தற்போது அணியுடன் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.

சமீபத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் அரவிந்த டி சில்வா தலைமையில் புதிய தெரிவுக் குழு உருவாக்கப்பட்டது. இதில் உறுப்பினராக முன்னாள் வீரர் சங்கக்காரா இடம்பெற்றிருந்தார்.

அதேபோல் ஜெயவர்த்தனேவும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இது தொடர்பாக ஜெயவர்த்தன டுவிட்டரில் கூறுகையில், ”இந்த தகவல் எங்கிருந்து வந்தது. நான் வர்ணனை பணியில் மட்டுமே ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இலங்கை அணியுடன் இல்லை” என்று கூறியுள்ளார்.

Mahela Twitt