ஆபாசமாக வெளியான நடிகை ஜோதி கிருஷ்ணாவின் புகைப்படம்!!

564

Jyothi Krishna

போட்டோகிராப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை ஆபாசமாக புகைப்படம் வெளியிட்ட செயலுக்கு நடிகை ஜோதி கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள திரையுலகில் மிகப்பிரபல நடிகையான ஜோதி கிருஷ்ணா, சில பொலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

பொதுவாக தென்னிந்திய திரையுலகில், நடிகைகளை கொண்டு போட்டோஷீட்டுகள் நடத்தப்படுவது வழக்கம், இதனை பார்க்கும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தில் இருந்து நடிகைகளின் தலையை மட்டும் போட்டோகிராப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட் செய்து, நிர்வாணமாக இருக்கும் உடல்களில் இணைத்து சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

இதுபோன்றே, நடிகை ஜோதி கிருஷ்ணாவின் புகைப்படமும் ஆபாசமாக வெளியிடப்பட்டுள்ளது, இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய ஆபாசபுகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானதை எனது நண்பர்கள் எனக்கு தெரியப்படுத்தினார்கள், எனது முகநூல் பக்கத்தினை 1.5 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.

இதுபோன்று நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாக வெளியிடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும், தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் வருத்தம் அடைந்தேன் என்று கூறியுள்ளார், கடந்த ஆண்டு நடிகை ஆஷா சரத் மற்றும் கேரள தொலைக்காட்சி நடிகையான காயத்ரி அருண் ஆகியோரின் புகைப்படத்தினை ஆபாசமாக வெளியிட்ட குற்றத்திற்காக இரண்டு வாலிபர்க கேரளாவில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.