பின்னணிப் பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து மக்களை ஏமாற்றிய பிரபல தொலைக்காட்சி!!

365

Anand

அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று பிரம்மாண்ட குரல் தேடல் என்ற பெயரில் பாடல் நிகழ்ச்சி நடத்தியது. அதன் 5வது சீசனில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றார்.

ஆனால் இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

புதிய குரல்கள் அறிமுகப்படுத்தவே இந்த போட்டி என்று சொல்லிக் கொண்டு ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய ஆனந்தை அத்தொலைக்காட்சி தேர்வு செய்திருப்பது பெறும் மோசடி என்று பலர் தங்கள் வலைப்பகுதிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அவர் பாடிய பாடல்களின் விவரம் இதோ
இந்த வான்வெளி விடியாதோ – ஆரோகணம்
யார் வீட்டு மகனோ – நீர்ப்பறவை
10 எண்றதுகுள்ள – கானா கானா
இவன் வேற மாதிரி – தனிமையிலே