பீப் பாடல் விவகாரம் : மீண்டும் அனிருத்துக்கு சிக்கல்!!

233

Anirudh

பீப் பாடல் விவகாரம் தொடர்பான பிரச்சனை முடிந்தது என்று எதிர்ப்பார்த்த நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது. அண்மையில் தான் சிம்பு, அனிருத் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் பொலிசில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், கோவை 2வது நீதிமன்றில் கொங்குநாடு அருந்ததி பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் சிவாஜி ஆகியோர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் சிம்பு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான ஆணையை உயர்நீதிமன்றத்தில் பெற்று இருப்பதாக கூறி, அந்த ஆணையை சமர்ப்பித்தார், அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

இசையமைப்பாளர் அனிருத் சம்மனை பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.