பரீட்சையில் சித்தியடையாத விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

633

Hang

வெளியான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் திருப்தி இல்லாமையால் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

புஸ்ஸல்லாவை, நயாப்பனை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளின்படி குறித்த மாணவன் சித்தியடையாத காரணத்தினாலேயே இந்த முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.