வவுனியாவில் மதுபானச்சாலைகளை மூடுமாறு கோரி நகரெங்கும் சுவரொட்டிகள்!!

1150

IMG_8922

கிராமங்களில் மக்களின் வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள மதுபானக்கடைகளை இழுத்து மூடுமாறு கோரி மத்திய, மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கும் சுவரொட்டிகள் சமூக விழுப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் வவுனியா நகர் மற்றும் கிராமப் புறங்களில் இன்று (23.03.2016) ஒட்டப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஊடக பேச்சாளர் எஸ்.சதீஸ்குமார்..

2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எமது பிரதேசத்தில் நடைபெறும் குற்றச்செயல்களான சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள், கொலை, கொள்ளை மற்றும் விபத்து போன்ற அனைத்து குற்றச்செயல்களுக்கும் மூல காரணமாக போதைப்பொருள் பாவனை அமைந்துள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தை இலக்கு வைத்து கிராமப்புறங்களை நோக்கி சாராயக்கடைகள் உருவாகிவருவதாக குற்றஞ்சாட்டிய அவர் எமது மக்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் நோக்கோடு இவை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

எனவே இதை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி கிராமப்புறங்களிலுள்ள மதுச்சாலைகளை மூடுமாறும் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய, மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றும்வரை மக்களை அணி திரட்டி எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

IMG_8905