வவுனியா பொது வைத்தியசாலையில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!!

518

 
உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு வவுனியா வைத்தியசாலை காசநோய் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

காச நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் முச்சக்கர வண்டிகளில் காசநோய் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு நகரில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றதுடன், மக்களுக்கு விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.

இதில் காசநோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரிகள், தாதிய மாணவர்கள், பொலிஸார், முச்சக்கர வண்டி சாரதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

news (1) news (2) news (3)