உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறீர்களா?..கட்டுப்படுத்த இதோ சில வழிகள்!!

350

bigstock-portrait-of-young-angry-man-52068682

கோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள் என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல.உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து வரை பொறுமையாக எண்ணுங்கள்.இந்த திடீர் நிதானம், கோபத்தை தணிக்க உதவும். வேண்டும் என்றால், அந்த இடத்தை விட்டு அகல்வதும் சரியான ஆலோசனை.

பெரும்பாலும், கோபம் என்பது மற்ற மனக் கிளர்ச்சிகளின் வெளிப்பாடு. நீங்கள் நிஜமாகவே கோபம் ஏற்படுத்திய விஷயத்தின் மீது கோபத்தில் இருக்கிறீர்களா ? அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்ட நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.

கோபத்தின் வேர் தெரிந்தால் அதற்கான தீர்வு காண முடியும். சினத்தின் தணலில் வாடும் போது, எதிராளியை நோக்கி வாய்க்கு வந்ததை சுலபமாக சொல்லி விட்டு, பிறகு வருந்துவதே மனித இயல்பு.

நேர்மாறாக, சில நொடிகளை செலவழித்து மனதை ஒருமுகப்படுத்தி, கோபத்திலும் என்ன பேச வேண்டும் என்று நம் மனதுடன் ஆலோசித்து விட்டு பேசினால் எந்த பிரச்னையும் சுமூகமாக முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சினத்தை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சவால் தான். கடுமையான கோபம் தணிந்தவுடன், உங்கள் கோபத்தை நல்ல முறையில் எடுத்துரைத்து புரிய வைக்க வழிகளை தேடலாம்.

கோபத்தில் இருக்கும் போது, கோபம் ஏன் வந்தது, எதற்கு வந்தது, யாரால் வந்தது என்று மட்டுமே ஆராய்ந்து ஆராய்ந்து மூளையை சூடாக்குவதை நிறுத்தி விட்டு, கோபம் வந்த காரணியை கண்டுபிடித்து அதற்கு ஒரு உடனடி தீர்வு காண்பது மிக்க அவசியம்.கோபம் எதையும் சீராக்காது, மேலும் மேலும் பிரச்சனைக்கே வழிகோலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.