வவுனியாவில் 14 ½ கலா கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது!!

1367

 
வவுனியாவில் நேற்று 14 ½ கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து பொதி செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவினை வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பேதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் திட்டமிடப்பட்ட அடிப்படையிலேயே கஞ்சா விற்பனையாளர்களிடம் தொடர்பு கொண்டு டீல் பேசியே கஞ்சாவினை வவுனியாவிற்கு எடுத்துவரும்படியும் அதனை வவுனியாவில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து பருத்தித்துறை பகுதியிலிருக்கும் 19 வயதுடைய இளைஞரே மேற்படி கஞ்சாவினை எடுத்துவந்து வவுனியா சாந்தசோலைப் பகுதியில் வைத்திருந்தபோது பொலிசார் கஞ்சாவினையும் இளைஞனையும் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

image-2cf82ed3bdb2c1ab783a9e31acb584194b76f8eecb7b4d39a65d7b1a36c732f7-V image-6fcaeb8ee3987ba1d8d0e7f49ca70fc971aedfe3f2d5e974ac17d44c9d03ed11-V image-7dd5dfa1ce6128cd47d44fe0dc611d75dbfe5151a232505f94a3f41c38d1405d-V image-8524a6de84b91f7f73d7a51f52180726002b2ae1d085fe88d05246b37104cad6-V