
கம்பொளை பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ம் திகதி 10 வயதுடைய குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நேற்று சிறுமியின் தந்தையினால் கம்பொளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.52 வயதுடைய ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.





