வவுனியாவில் 98 காச நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!

584

Kaasam

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 98 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக வவுனியா பொது வைத்திசாலையின் காசநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையால் உலக காசநோய் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காசநோய் ஒரு பரம்பரை நோயல்ல மாறாக அது மாற்றக்கூடிய ஒரு நோயாகவே இருக்கிறது என தெரிவித்த அவர், வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 98 காச நோயாளர்களும், இலங்கையில் பத்தாயிரம் காச நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.