தங்கையின் குழந்தைக்கு தந்தையான அண்ணன்: 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்!!

404

sister_child_002

இங்கிலாந்தில் தங்கையின் குழந்தைக்கு தந்தையான நபருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் விவரங்கள் சட்ட காரணங்கள் கருதி வெளியிடப்படவில்லை.

இவருக்கு 21 வயது இருக்கையில், இவரது சகோதரிக்கு 15 வயதாகியுள்ளது, அப்போது தனது தங்கையுடன் தவறான உறவு கொண்டுள்ளார்.இதனால் கருவுற்ற தங்கை, பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார், இந்த சம்பவம் நடைபெற்று காலங்கள் கடந்துவிட்ட நிலையில், அக்குழந்தையானது உடல் வளர்ச்சி தாமதம், கற்றல் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளது.

இதனால், மருத்துவரிடம் அனுகியதில், அக்குழந்தையின் தந்தையின் மரபணுவை சோதனை செய்து பார்த்ததில், இவர்களது குடும்பதினருடன் ஒத்த மரபணுவாக இருந்துள்ளது. விசாரணையில், தனது தாயின் சகோதரன் தான் இக்குழந்தைக்கு தந்தை என தெரியவந்துள்ளது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, பொலிசார் அக்குழந்தையின் தாயாரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக பெற்றுக்கொண்டனர்.

பின்னர், இதுதொடர்பான வழக்கை விசாரித்த Bristol Crown நீதிமன்றத்தில் நீதிபதி, Barry Cotter QC, இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் ஆகும் என்றும் இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் எனக்கூறி அந்நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.