
நயன்தாரா கையில் தற்போது ஆறு படங்கள் உள்ளது. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று நடந்த திருநாள் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜீவா, ‘இந்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஆனால், அவர் அந்த நேரத்தில் பிஸியாக இருந்தார், இருப்பினும் எங்கள் காத்திருப்பிற்கு பலனாக அவரே வந்து நடித்துக்கொடுத்தார்’ என கூறியுள்ளார்.





