பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

952

urin

பொது இடங்­களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அப­ராதம் விதிக்கும்­படி மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. பிரதமர் மோடியின் சுகா­தார திட்­டத்தை வெற்றி பெறச் செய்ய, மத்­திய ஊரக மேம்­பாட்டு அமைச்­சகம் தீவிர நட­வ­டிக்கை எடுக்கத் தொடங்­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக அனைத்து மாநில தலைமை செய­லா­ளர்­க­ளுக்கும் ஊரக மேம்­பாட்டு அமைச்­சகம் கடிதம் அனுப்­பி­யுள்­ளது.

அதில், உங்கள் மாநி­லத்தின் முக்­கிய நக­ரங்­களில் பொது இடங்­களில் குப்பை கொட்­டு­ப­வர்கள், சிறுநீர் கழிப்­ப­வர்­க­ளுக்கு அப­ராதம் விதி­யுங்கள். ஏப்ரல் 30ஆம் திக­திக்குள் இதை அமுல்­ப­டுத்­துங்கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

மேலும், எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் 30ஆம் திக­திக்குள் அப­ராதம் விதிக்கும் நடை­மு­றையை 10 முதல் 15 நக­ரங்­களில் அமுல்­ப­டுத்­துங்கள்.

பொது இடங்­களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அப­ராதம் விதி­யுங்கள் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அப­ராத திட்­டத்தை அமுல்­ப­டுத்தும் முன்பு, நகர்ப்­ப­கு­தி­களில் உள்ள அனைத்து பொது இடங்­க­ளிலும் கழிவறை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.