கடுமையான வெப்பம் காரணமாக மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்!!

536

heat-death

அதிக வெப்பத்தால் மயங்கி விழுந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மருதுநகர் பகுதியினை சேர்ந்த 60 வயதுடைய அஞ்சலிங்கம் தர்மதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழில் உள்ள உறவினரை பார்க்க கடந்த 15ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது, கடும் வெயிலால் வீதிக்கு அருகில் உள்ள கடையொன்றில் நின்று இளைப்பாறியபோது மயங்கி விழுந்துள்ளார்.

குறித்த நபரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே நேற்றைய கடுமையான வெப்பத்தினாலும் அவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.