வவுனியாவில் வெப்பத்தைத் தனித்த மழை : மக்கள் மகிழ்ச்சி!!

553

 
வவுனியாவில் அண்மைக்காலமாக கடும் வெயிலினால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று (28.03.2016) பெரும் இடிச் சத்தங்களுடன் மழை பெய்தது. கடும் வெப்பத்தினால் சிரமப்பட்டு வந்த மக்கள் இம் மழையால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் வழமைக்கு மாறாக கடும் வெயில் சுட்டெரித்ததுடன். இலங்கையில் அதிகளவான வெப்பநிலையும் வவுனியாவில் பதிவாகியிருந்தது.

இக் கொழுத்தும் வெயிலினால் வவுனியா மட்டுமன்றி முழு இலங்கையும் பாதிக்கப்பட்டதுடன் நேற்று யாழ் நகரில் வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

12884455_463539407172713_97671346_n 12895360_463539230506064_132994820_n 12899801_463539237172730_1321305139_n 12899976_463539217172732_215231265_n 12910126_463539327172721_1918275752_n 12910704_463539200506067_606411394_n 12919049_463539353839385_1443236710_n 12921063_463539303839390_883939729_n 12921077_463539220506065_1188657602_n