வவுனியாவில் அண்மைக்காலமாக கடும் வெயிலினால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று (28.03.2016) பெரும் இடிச் சத்தங்களுடன் மழை பெய்தது. கடும் வெப்பத்தினால் சிரமப்பட்டு வந்த மக்கள் இம் மழையால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் வழமைக்கு மாறாக கடும் வெயில் சுட்டெரித்ததுடன். இலங்கையில் அதிகளவான வெப்பநிலையும் வவுனியாவில் பதிவாகியிருந்தது.
இக் கொழுத்தும் வெயிலினால் வவுனியா மட்டுமன்றி முழு இலங்கையும் பாதிக்கப்பட்டதுடன் நேற்று யாழ் நகரில் வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.






