
அம்பலான்கொட மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலியானவர் வர்த்தகர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





